தமிழ்நாடு 12-ஆம் வகுப்பு தேர்வு முடிவு வரும் மே 5-ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது தேதி மாற்றப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.
மே 7-ஆம் தேதி நீட் தேர்வு நடைபெற இருப்பதால் மாணவர்களுக்கு தேவையில்லாத மன அழுத்தத்தை ஏற்படாமல் இருக்க 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு அறிவிக்கும் தேதி மாற்றப்பட்டுள்ளது என அமைச்சர் தெரிவித்தார்.