News
Stay updated with the latest news and official announcements from across sectors including education, tourism, government initiatives, technology, and more. Get accurate, timely, and informative coverage of developments that matter to students, professionals, and the general public. Our news section brings you verified updates, useful resources, and opportunities you shouldn’t miss.
- Details
Tamil Nadu Top Headlines - June 13, 2025
Stay updated with the latest happenings across Tamil Nadu. Here's a snapshot of today's significant news:
Major Incidents & Developments
- Chennai Metro Accident: A tragic incident occurred during metro construction near Porur - Alandur in Chennai, where a track bridge collapsed, resulting in one fatality. Investigations are underway.
- Air India Plane Crash (Ahmedabad): A major national tragedy unfolded as an Air India flight carrying 242 passengers crashed shortly after takeoff in Ahmedabad. Union Home Minister Amit Shah assured government support for the victims' families. While not in Tamil Nadu, this event has widespread national implications and is a key focus in local news.
- Kamal Haasan Becomes Rajya Sabha MP: Actor-politician Kamal Haasan has been officially elected as a Rajya Sabha member. All six candidates for the Rajya Sabha seats were elected unopposed.
Political & Government News
- BJP's 2026 Ambitions: State BJP chief Annamalai has expressed confidence that the BJP will form a government in Tamil Nadu independently in 2026, without a coalition.
- Madurai Adheenam Controversy: The dispute surrounding the Madurai Adheenam has reignited, with the Hindu Makkal Katchi raising concerns over alleged violations of Agamic rules.
- CM Stalin's Salem Visit: Chief Minister M.K. Stalin is on a two-day visit to Salem, which includes an 11 km roadshow, highlighting key government initiatives and public outreach.
Other Notable News
- Government Job Opportunities: The Tamil Nadu government has announced various job opportunities across departments, with salaries up to Rs. 70,000. Notably, these positions do not require a written test or interview.
- NEET Re-examination Case: In the ongoing case demanding a NEET re-examination, the High Court has directed the submission of CCTV footage as evidence.
- Temple Funds for Marriage Halls Barred: The High Court has issued a directive prohibiting the use of temple funds for the construction of marriage halls.
- Udhayanidhi Stalin's Sports Initiatives: Udhayanidhi Stalin extended financial assistance worth Rs. 34.19 lakh to sportspersons through the Tamil Nadu Champions Foundation, promoting sports development in the state.
- Hits: 35
- Details
கடந்த பிப்ரவரி 1-ஆம் தேதி மத்திய அரசு வருமான வரி உச்சவரம்பை உயர்த்தியது. இந்த மாற்றம் 2025 - 2026ம் நிதியாண்டில் செயல்படுத்தப்படும்.
மத்திய அரசு நிதிநிலை அறிக்கையின் போது வெளியிடப்பட்டுள்ள "வருமான வரி உற்சவ பாம்பு" (Income Tax Slab) அடிப்படையில், எவ்வளவு வருமானத்திற்கு எவ்வளவு வருமான வரி செலுத்த வேண்டும் என்பதை கீழே காணலாம்.
New Tax Regime:
வருடாந்தம் ₹12 லட்சம் வரை வருமானம் ஈட்டுவோர், வருமான வரி கட்ட தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது New Tax Regime முறையில் வரி செலுத்துவோருக்கான புதிய உச்சவரம்பாகும்.
Old Tax Regime முறையில் வருமான வரி செலுத்துவோருக்கு எந்தவிதமான மாற்றம் குறித்து அறிவிப்பு வெளியிடப்படவில்லை.
- Hits: 197
- Details
🟩 அத்தியாவசிய அறிவிப்பு 🟩
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கவனத்திற்கு:
📌 விவரம்:
10.03.2020 க்கு முன்னர் உயர்கல்வித் தகுதிபெற்ற அனைத்து வகை ஆசிரியர்களின் எண்ணிக்கை தொடர்பான விவரங்களை, கீழ்க்கண்ட GOOGLE SHEET-இல் பதிவுசெய்ய வேண்டியுள்ளது.
📆 கடைசி நாள்:
🗓️ 08.04.2025 (செவ்வாய்க்கிழமை)
🕛 மாலை 12.00 மணிக்குள் விவரங்களை பதிவேற்றவும்.
📌 பூர்த்தி செய்யாத மாவட்டங்களுக்கு:
🕒 மாலை 3.00 மணி அளவில் நடைபெறும் இணையதள கூட்டத்தில் தவறாமல் கலந்துகொள்ள அறிவுறுத்தப்படுகிறது.
📎 Google Sheet இணைப்பு:
(இங்கு Sheet லிங்க் சேர்க்கவும்)
🔔 முக்கிய குறிப்பு:
தகவல்களை தாமதமாகப் பதிவுசெய்வதால் மாநிலத் தரவுத்தளப் பணிகளில் இடையூறு ஏற்படும் என்பதை நினைவில் கொள்ளவும்.
- Hits: 149
- Details
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் ஒன்றிய அரசுக்கு மாதத்துக்கு சராசரியாக 375 கோடி ரூபாய் வருமான வரி செலுத்துகின்றனர்
தகவல் உரிமை சட்டத்தின் கீழ் கோரிய விவரத்தில் பதில்.
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கான ஊதியத்தை மாநில அரசு வழங்குகிறது. இவர்கள் பெறும் ஊதியத்திற்கான வருமான வரி ஒன்றிய அரசுக்கு செல்கிறது. இதற்கு முன்பு வரை ஒவ்வொரு நிதியாண்டுக்கும் ஒரு ஊழியர் பெறும் ஊதியத்தை கணக்கிட்டு வருடத்துக்கு ஒருமுறை வருமான வரி செலுத்தி வந்தனர். ஆனால் ஊதியம் பட்டுவாடா செய்வதற்கு IFHRMS முறை அமல்படுத்தப்பட்ட பிறகு கடந்த ஆண்டிலிருந்து இந்த செயலி மூலம் கணக்கிடப்பட்டு மாதம் தோறும் வருமான வரி பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது.
இதுகுறித்து ஆதாரப்பூர்வமான தகவல்களை பெறுவதற்காக தமிழ்நாடு அரசின் கருவூலம் மற்றும் கணக்கு துறை ஆணையர் அவர்களிடம் கீழ்க்கண்ட தகவல்களை கடந்த 25.11.24 ல் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்டிருந்தோம்
தமிழ்நாடு அரசின் கீழ் பணிபுரியும் ஆசிரியர்கள் அரசு ஊழியர்களுக்கு 2024 செப்டம்பர் மாதம் வழங்கப்பட்ட மொத்த ஊதியம் எவ்வளவு? பிடித்தம் செய்யப்பட்ட வருமான வரி எவ்வளவு?
தமிழ்நாடு அரசின் கீழ் பணிபுரியும் ஆசிரியர்கள் அரசு ஊழியர்களுக்கு 2024 அக்டோபர் மாதம் வழங்கப்பட்ட மொத்த ஊதியம் எவ்வளவு? பிடித்தம் செய்யப்பட்ட வருமான வரி எவ்வளவு?
கருவூலம் மற்றும் கணக்கு துறை நான்கு மாதங்கள் கழித்து இதற்கான அளித்த விபரத்தினை 21.3.25 தேதியிட்ட கடிதம் மூலம் கிடைக்கப்பெற்றது.
அதில் கிடைத்த தகவல்கள்
தமிழக அரசின் கீழ் பணிபுரியும் ஆசிரியர்கள் அரசு ஊழியர்களுக்கு செப்டம்பர் 2024 ல் வழங்கப்பட்ட ஊதியம் ரூபாய் 5938 கோடி. அதில் பிடித்தம் செய்யப்பட்டு மத்திய அரசுக்கு வருமான வரியாக செலுத்திய தொகை ரூபாய் 375 கோடி ஆகும்.
தமிழக அரசின் கீழ் பணிபுரியும் ஆசிரியர்கள் அரசு ஊழியர்களுக்கு அக்டோபர் 2024 ல் வழங்கப்பட்ட ஊதியம் ரூபாய் 6413 கோடி. அதில் பிடித்தம் செய்யப்பட்டு மத்திய அரசுக்கு வருமான வரியாக செலுத்திய தொகை ரூபாய் 399 கோடி ஆகும்.
- Hits: 194
- Details
பாலிடெக்னிக் டிப்ளமா படித்த மாணவர்கள் தொழில்பயிற்சியுடன் கூடிய பி.இ. படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இந்தப் படிப்பில் சேரும் மாணவர்களுக்கு மாதம்தோறும் ரூ.12 ஆயிரம் உதவித் தொகை வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
அண்ணா பல்கலைக்கழகத்தின் காஞ்சிபுரம் உறுப்பு பொறியியல் கல்லூரியில் எச்.எல். மண்டோ ஆனந்த் இந்தியா நிறுவனத்தின் முழு உதவியுடன் பி.இ. எலெக்ட்ரிக்கல் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் என்ற தொழில்பயிற்சியுடன் கூடிய பொறியியல் படிப்பு வழங்கப்படுகிறது. இந்த 4 ஆண்டு கால பட்டப் படிப்பில் பாலிடெக்னிக் டிப்ளமா ( எலெக்ட்ரிக்கல் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ், இசிஇ, மெக்கானிக்கல், கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜி, ஆட்டோ மொபைல்) முடித்தவர்கள் சேரலாம்.
டிப்ளமா படிப்பில் குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண் அவசியம். இப்படிப்பில் சேரும் மாணவர்களுக்கு படிக்கும் போதே தொழில் பயிற்சியுடன் மாதம் தோறும் ரூ.12 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும். அதோடு கல்விக்கட்டணம், உணவு, போக்குவரத்து , மருத்துக் காப்பீடு ஆகிய அனைத்து செலவுகளையும் எச்.எல். மண்டோ ஆனந்த் இந்தியா நிறுவனமே ஏற்றுக்கொள்ளும்.
தற்போது 2025-2026 கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் ஜெ.பிரகாஷ் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: அண்ணா பல்கலைக்கழகத்தின் காஞ்சிபுரம் உறுப்பு பொறியியல் கல்லூரியில் வரும் கல்வி ஆண்டில் (2025-2026) ஒருங்கிணைந்த பயிற்சியுடன் கூடிய பி.இ. எலெக்ட்ரிக்கல் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் படிப்பில் சேர ஆன்லைன் வாயிலாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்காக cfa.annauniv.edu/cfa என்ற இணையதளத்தை பயன்படுத்தி விண்ணப்பிக்க வேண்டும். நடப்பு கல்வி ஆண்டில் (2024-205) டிப்ளமா படிப்பை முடிக்கும் மாணவர்கள் மட்டுமின்றி கடந்த 2022, 2023, 2024- ம் ஆண்டுகளில் படித்து முடித்தவர்களும் இதற்கு விண்ணப்பிக்க தகுதியுடையவராவர். டிப்ளமா மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும்.
இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு ஏப்ரல் 1-ம் தேதி (இன்று) தொடங்கியுள்ளது. விண்ணப்ப கட்டணம் செலுத்துவது, சான்றிதழ்களை ஆன்லைனில் பதிவேற்றுவது ஆகிய பணிகளை ஏப்ரல் 4 முதல் மேற்கொள்ளலாம். ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் ஜுன் 30-ம் தேதி ஆகும். கூடுதல் விவரங்களை மேலே குறிப்பிடப்பட்ட இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- Hits: 208
- Details
கோடை விடுமுறை தினத்தையொட்டி 3 நாள் சுற்றுலா திட்டத்தின் கீழ் சுற்றுலா செல்ல விரும்பும் நபா்கள் சுற்றுலாத்துறையின் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என சுற்றுலாத்துறை அறிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகம், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் தேவையை அறிந்து, அரைநாள் முதல் 14 நாட்கள் வரையில் 52 வகையான தொகுப்புச் சுற்றுலா திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
இந்நிலையில், சுற்றுலாப்பயணிகள் மற்றும் மாணவ, மாணவிகள் தங்கள் கோடை விடுமுறையை முன்னிட்டு குடும்பத்துடன் கொண்டாடி மகிழ்கின்ற வகையில் 3 நாள்கள் ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு, ஒகேனக்கல், குற்றாலம், மைசூா், பெங்களூா் மற்றும் மூணாா் சுற்றுலாக்கள் போன்ற கோடைக்கால சுற்றுலா பயணத்திட்டங்கள் கடந்தாண்டு தொடங்கப்பட்டு அதற்கான முன்பதிவு, தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழக இணையதளத்தில் கடந்த 2024 நவ.8 முதல் நடைபெற்று வருகிறது.
மேலும் இக்கோடைக்கால சுற்றுலாக்களுக்கு தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகத்தின் மூலம் சுற்றுலாப் பயணிகள் பயன்பெறும் வகையில் கட்டணத்தில் சிறப்பு சலுகைகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகத்தின் இந்த பயணத்திட்டங்களுக்கு முன்பதிவு செய்ய இணையதளத்தில், அல்லது சென்னை வாலாஜா சாலையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் நேரடியாகவும் முன்பதிவு செய்யலாம்.
மேலும் கூடுதல் விவரங்களை தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழக கட்டணமில்லா 18004251111044-25333333, 044-25333444 எனும் தொலைபேசி எண்களையும் மற்றும் வாட்ஸ் அப்-இல் தொடா்பு கொள்ள கைப்பேசி 7550063121 எனும் எண்களையும் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது
- Hits: 154